Saturday, May 08, 2010

வாழ்த்து

திரு.வசந்த் அவர்களின் நூல் வெளியீட்டிற்கான வாழ்த்து
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா

வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்
வளர்க உன்புகழ் வையகம் தன்னில்
சூழ்க நல்லவர் நின்னுடன் என்றும்
சொல்லில் நல்லறம் காத்துநீ வாழ்க
ஆழ்ந்த கல்வியும் நேர்மையும் நிறைந்து
அழகு செந்தமிழ் சிறுகதை வரைந்து
நீள்க நற்றமிழ் புகழுல கெல்லாம்
நீயும் நிந்திறன் செழித்திட வாழ்க.

No comments: