Tuesday, May 04, 2010

இயற்கை வளங்களைக் காப்போம்.

புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா

கலைகள் வளரும் கவலைக் குறையும்
கருணை நிலைக்கும் உலகில்
விலையில் மணியும் பொருட்கள் பலவும்
விளையும் பெருகும் வளனும்
மழையும் பொழியும் உயிர்கள் மகிழ்
மரத்தை வளர்ப்போம் இயற்கை
வளத்தைச் சிதைக்க துயரம் நமக்கே
வறுமைப் பிடியில் உழல்வோம்.

No comments: