Wednesday, January 17, 2007

சுனாமி கவிதை

.................ஐயோ பாரதீ.......
நெரித்த கடலிடை என்ன கண்டிட்டாய்
நீல விசும்பிடை என்ன கண்டிட்டாய்
........ ..... .... .............
...ஈர மணலிடை நின் முகம் கண்டேன்
...உயிரைப் பறித்த கடலிடை
...நின் முகம் கண்டேன்
ஐயோ பாரதீ......
...எங்கும் காணவில்லையே உன்னை
...நீயாக நினைத்து
...ஆயிரம் பேருக்கு காரியம் செய்யும்
...உன் அன்புக்காதலன்....

தலைப் பொங்கல்




மஞ்சள் பூசி நீராடி
...மனதை தூய்மையாக்கி
புத்தாடை உடுத்தி
...புதுமஞ்சள் கட்டிவைத்து
பூவைத்து பூஜித்து
...புதுமனையாள் பொங்கலிட
பூத்துவரும் நன்னாளில்
...தலைப்பொங்கல் திருநாளில்
வாழ்த்திவிட எண்ணுகின்றோம்
..."வாழ்க நீ, பகலவன் போல்
....பார்புகழ பலகாலம்"

பொங்கல் திருநாள்

வாசல் தெளித்து
வண்ணக் கோலமிட்டு
நீராடி, நெஞ்சை
நேராக்கி, நித்தம்
போராடும் உழவர்
பெருவாழ்வு பெற்றிடவே
புத்தாடை உடுத்தி
புதுப்பானை பொங்கலிட்டு
போற்றிடுவோம் ஞாயிற்றை
புவனம் காத்திடவே...

சரஸ்வதி துதி

சிரித்த முகமும் செவ்வரி கண்களும்
செந்தேன் இதழும் வெண்தா மரையும்
வீணையும் ஓலையும் வெண்முத்து மாலையும்
சூடிடும் தேவியை நாடிடு மனமே...
------------
காரிருள் கூந்தல் அலையென ஆகும்
இருவிண் மீன்கள் கண்ணென ஆகும்
கோவைச் செவ்விதழ் தேனென இனிக்கும்
தேவியின் தேகம் தண்ணொளி நிலவு...
...............
நெஞ்சம் தாமரை நினைவுகள் பூமழைத்
தூவிடும் நேரம் பாயிரம் ஆகும்
வேணியை துதித்திட வேண்டும்வரம் கிடைக்கும்
ஆனந்தம் தருமே அவள்திரு நாமம்...
...............
செந்தமிழ் வளர்க்கும் இயலிசை அறியும்
அன்னையின் அருளே அறிவினை அளிக்கும்
தேவரும் போற்றும் அவள் திருப் பாதம்
துதித்துநீ மனமே துயர்களை வாயே...
...............