Friday, August 11, 2006

தமிழமுதம்


கடலோடு காற்று
தோன்றியப் போது
அக் காற்றோடு கலந்தது
எங்கள் மூச்சு
தமிழ் பேச்சு...

கல் கொண்டு மக்கள்
உரசியப் போது
காதல் கொண்டு
கவிதை பேசியது
எங்கள் குடி...
தமிழ் குடி...

காடும் மலையும்
அலையும் கடலும்
வாயலோர் வாழ்வும்
முதற் கொண்டு
கவிதை யாத்தனர்
எம் குடி மூத்தவர்...

பாலையும் கொண்டதிப்பெருமை
பழைமை வாழ்வுக்கோர்
பறைசாற்றும் உரிமை...

எம்மில்,
வீரம் கொண்டு
வாள் பேசிய
வெற்றி வேந்தர்
பலருண்டு..

கல் கொண்டு
காலனை வென்ற
காளையரும்
இங்குண்டு

கடைக் கண் பார்வையால்
காதலை வென்று
கடிமணம் கொண்ட
கற்புடை பெண்டீர்
பொற்புடன் நடத்திய
பாங்கு, எம்
குடும்ப வாழ்விற்க்கோர்
பெரும் சான்று..

பண்புடை நெஞ்சினர்
பரத்தையராயினும்
இவர் பயின்ற கலைகளாயிரம்
இவர் பற்றிய பாக்கள்
பல்லாயிரம்...

இவையணைத்தும்
எம் பாட்டன் சொத்து...

எங்கள் குடியிலோர்
பாட்டி
கோல் கொண்டு நடந்திடும்
மூதாட்டி
'ஔவை'
என்பதவள் பெயர்
அன்பு தன்னில்
வளர்ந்தது
அவளுயிர்...

அறம் செயச் சொல்லி
அவள் அழைத்தது
'ஆத்திச்சூடி'
நாளைய பிள்ளைக்கும்
அது
நல்வழிகாட்டி...

கொன்றை வேந்தன்,
மூதுரை யென்று
அவள் மொழிந்த நூல்
அத்தனையும் முத்து
அள்ளக்குறையாத சொத்து...

வள்ளுவன் என்றொரு முனிவன்
தமிழ் குடியில் பிறந்த
பெருந் தலைவன்
'அறம் பொருளின்பம்' மென்றே
அவன் தந்தது
'தமிழில் ஒரு வேதம்'...

போற்றப் பட வேண்டிய ஒருவன்
தமிழ்த் தாய்க்கு
தவப் புதல்வன்,
அன்னைக்கு
அவன் செய்ததொன்றுண்டு
அரிய சுவடி பலவற்றை
அச்சில் ஆக்கிக்
கொடுத்ததோர் தொண்டு...

அன்பு நெஞ்சில்
மிகக் கொண்டு
நாங்கள் அழைத்த பெயர்
'தமிழ் தாத்தா'
உ.வே.சா. தாத்தா...

'பாரதி' என்னுமோர்
பெயரோ எங்கள்
பரம்பரையில் ஓர்
புதையல்...

அவன்
பாட்டில் வென்றான்
பெரும் பகையை
ஆட்டம் கண்டது
அந்நியராட்சி...
அடைந்துவிட்டோம்
'ஆனந்த சுதந்திரம்'..

அவனுக்குப் பின்னே
அவன் தாசன்
மண்ணில்
மூடப்பழக்கங்கள்
மிதிக்கவாந்தான்.

பெண்ணிண் வாழ்வுக்கு
பெருமை தந்தான்
பொதுவுடைமை பயிருக்கு
நீரைத்தந்தான்.

தீண்டாமை பேதங்கள்
தகர்க்கச் சொன்னான்
அவன்
தூயத் தமிழில்
தீயைச்சுட்டான்.

பாட்டில் சொன்னது
பதச் சோறு
எழுத்தினிடை இருப்போர்
பலநூறு
எங்கள் பரம்பரையின்
வேரு...

இவர்
பாரில் தமிழை
பரப்பிடவே
பலப்பல வடிவங்கள்
புகுத்திவிட்டார்

உரைநடை நாடகம்
நாவல் சிறுகதை
என்றெனவேப்பல
புதிய அணிகலண்
பூணுகிறாள் நாயகி
புதுக்கவிதை யெனும்
கீரீடம் கொண்டாள்...

கணிணி மொழியிலும்
கால் பதித்தாள்
காலத்தை வெல்வாள்
கன்னித்தமிழாள்

இனத்தோடு வளர்ந்தது
தமிழ் மொழி
மொழியோடு வளர்ந்தது
தமிழர் மனம்..

இன்று
ஆக்கம் கொண்டத்துறை
அனைத்திலும்
ஆங்கோர் தமிழன்
அமர்ந்திருப்பபன்

ஏற்றம் கொள்ளும்
தொழில் செய்வான்
ஊக்கம் கொண்ட
உளம் உடையான்..

இனி வீழ்ச்சி
அவனுக்கில்லை,
வீணாண கவலை
மனதுக்குத்தொல்லை

உலகம் உள்ளவரை
வளரும் தமிழ்
வாழ்வான் தமிழன்
வானும் ஆகாது
அவனுக்கோர் எல்லை...












அழகிய வீடு


வந்ததும்
வரவேற்பறை
அந்தப் பக்கமாய்
பெரியதாய்
படுக்கும் அறை...
பாட்டிக்கு-சின்னதாய்,
பக்கத்தில்
பிள்ளைகள்
படிக்கும் அறை...
இங்கிருந்தால்
பணம் கொட்டும்
எங்களுக்கு
என்பதால்
அங்கேயே இருக்கட்டும்
எங்கள்
பண அறை...
சமையலறை
பக்கத்தில்
சாமி அறை...
அக்கரையாய் கட்டியதில்
அம்சமாய் அமைந்தது.
ஆனாலும்
அதிலோர் அம்மணம்
திறந்து கிடப்பதையெல்லாம்
மூடுங்கள்
மரவேலை ஆரம்பம்.
அடுத்தது
'கிரஹப்பிரவேசம்'
வந்தார்
'கட்டிடக்காரர்'
"நன்றாக இருக்கிறது"
சொன்னார்
சுரத்தில்லாமல்
அடடா!
தாயின் கண்களில்
குழந்தையின்
அம்மணம்
தானே அழகு!